Close
செப்டம்பர் 20, 2024 8:42 காலை

புதுகை பூங்கா நகர் மகாசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா…

புதுக்கோட்டை

பூங்காநகர் மகாசக்தி முத்துமாரியம்மன்கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை பூங்கா நகரில் எழுந்தருளியுள்ள மகாசக்தி முத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா  கோலாகலமாக நடைபெற்றது

முன்னதாக அதிகாலை முதலே 300 மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட திமுக பொருளாளர் ஆ.செந்தில்,  நகர் மன்ற உறுப்பினர் வளர்மதி சாத்தையா தொழிலதிபர்கள் பெருமாள், பாரி வள்ளல், அன்னபூர்ணாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை
பூங்காநகர் மாரியம்மன்கோயிலுக்கு வந்த அமைச்சர் ரகுபதி, எம்எல்ஏ முத்துராஜா ஆகியோரை வரவேற்ற விழாக்குழுவினர்

அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக அறுசுவை அன்னதானத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்து பரிமாறினார்.

முன்னதாக விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் முத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளை தலைவர் பழக்கடை சேகர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்

தொடர்ச்சியாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர் பூச்சொரிதல் விழாவில் அந்த பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top