Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவர் சங்க செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டை

புதுகையில் நடைபெற்ற இந்திய மருத்துவர் சங்க செயற்குழு கூட்டத்தில் பேசிய சங்கத்தலைவர் சாமிநாதன்

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவர் சங்கம் உறுப்பினர் களின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஐ எம் ஏ ஹாலில் நடைபெற்ற  இந்திய மருத்துவர் சங்க செயற்குழு  கூட்டத்திற்கு தலைவர்   டாக்டர்  த. சுவாமிநாதன்   தலைமை வகித்தார்.  செயலாளர்  டாக்டர்     அ. முஹம்மது சுல்தான்    வரவேற்புரையாற்றினார்.

சங்கத்  தலைவர்   டாக்டர்  த. சுவாமிநாதன் பேசுகையில்,
மருத்துவமனை பதிவுச் சட்டப்படி பதிவு செய்த மருத்துவ மனைகளுக்கு சான்றிதழ்களை பெற்றுத்தர இணை இயக்கு னரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும், மாசு கட்டுப் பாட்டு வாரியத்தில் இந்த ஆண்டு முதல் விண்ணப் பங்களை ஆன்லைன் மூலம் பதியவேண்டும். இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள்     மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை
புதுகையில் நடந்த ஐஎம்ஏ செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள்

தொடர்ந்து திருச்சி காவேரி மருத்துவமனை மூலம் தொடர் மருத்துவக் கல்வியை, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சூரஜ் நரசிம்மன்,   மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் ராஜராஜன் ஆகியோர்  மின்னணு திரைமூலம்  விளக்கிப் பேசினர். டாக்டர் சுரேஷ்குமார் நன்றிகூறினார்.  இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top