Close
செப்டம்பர் 20, 2024 3:43 காலை

புதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு புதுக்கோட்டை எல்ஐசி ஊழியர்கள் கடந்த திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தம் செய்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை கிளைத் தலைவர் வி.லதாராணி தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் தஞ்சை கோட்டத் துணைத் தலைவர் என்.கண்ணம்மாள், முன்னாள் கோட்டத் துணைத் தலைவர் எம்.அசோகன், வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.ராஜேந்திரன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் மு.முத்தையா, வெள்ளைச்சாமி, ராஜேந்திரசிங், என்.ராமச்சந்திரன், ஆர்.நடராஜன், கே.ஆறுமுகம். சங்கர், ஜெயபால், திருப்பதி உள்ளிட்டோர் பேசினர்.

முடிவில் கிளைச் செயலாளர் எம்.குருமூர்த்தி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top