Close
செப்டம்பர் 20, 2024 5:51 காலை

ஆலங்குடி தொகுதி வேப்பங்குடி பள்ளியில் வரும் முன் காப்போம் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை

ஆலங்குடி தொகுதியில் வேப்பங்குடி பள்ளியில் நடந்த வரும் முன் காப்போம் மருத்துவ முகாமை தொடக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு  மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  (30.03.2022)  துவக்கி வைத்து, கர்ப்பிணி களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:   ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை மீண்டும் புத்துணர்ச்சியுடன் முதல்வர் செயல்படுத்தியுள்ளார்கள்.

அதன்படி தற்போது நடத்தப்படும் முகாம்களின் மூலம் பெருநோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவற்றிற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த இயலும். மேலும் இம்முகாம்களில் சிறப்பு மருத்துவ குழுவினர்களால் பொதுமக்களுக்கு, குழந்தை நலம், பல்மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், நீரிழிவுநோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில்  முதலமைச்சர்,  கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறார்கள்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பெருநோய்கள் வருவதற்கு முன்பாகவே தடுத்திட வேண்டும் என்றார்   அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் .

இம்முகாமில் திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார மருத்துவ அலுவலர் ராம்சுந்தர், ஊராட்சிமன்றத் தலைவர் ராஜாங்கம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top