Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

புதுகை மாவட்ட விளையாட்டு திடலில் உயர்மின்கோபுர விளக்கு: அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைப்பு

புதுக்கோட்டை

புதுகை மாவட்ட விளையாட்டுத்திடலில் உயர்மின்கோபுர விளக்கை தொடக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில்  உயர்மின் கோபுர மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு    விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைத்தார்.

மாவட்ட விளையாட்டு திடலில் தினமும்  காலை ,மாலை  நேரங்களிலும்     500 க்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்  . உயர் கோபுர மின்விளக்கு,  பொது கழிப்பறை வசதி போன்ற  கோரிக்கைகளை தி பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின்  நிர்வாகிகள்  விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து கோரிக்கை வைத்தனர் .

 இதை நிறைவேற்றித்தருவதாக  அமைச்சர்  உறுதி அளித்தார். அதன்படி  விளையாட்டுத்திடலில்  சுமார் ரூ.4.5 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் உயர் மின் கோபுர மின்விளக்கு அமைக்கப் பட்டது.

புதுக்கோட்டை
புதுகை தி பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள்

இதையடுத்து மாவட்ட விளையாட்டுத்திடலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில்      விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று,  உயர் மின் கோபுர விளக்கை  மக்கள் பயன் பாட்டுக்கு  தொடங்கி வைத்தார்.

இந் நிகழ்வில்    மாவட்ட ஆட்சியர் கவிதாராமு ,நகர் மன்ற தலைவர்  திலகவதி செந்தில்குமார், துணைத் தலைவர் லியாக்கத்தலி,   ஆணையர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் செல்லப்பாண்டியன், க.நைனாமுகமது, எம்.எம். பாலு , பாலகிருஷ்ணன் , தி பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின்  தலைவர் பக்கிரிசாமி, செயலர் லயன்ஸ்  ஏ.அரவிந்த் உட்படபலர்  கலந்து கொண்டனர்.  கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த அமைச்சருக்கு வாக்கர்ஸ் கிளப் சார்பில்  நன்றி தெரிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top