Close
செப்டம்பர் 20, 2024 5:44 காலை

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

ஜல்லிக்ட்டு

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு  முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் ,தேனி, மதுரை , சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகளும் அதே போன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்து மாடுபிடி வீரர்களை திணறச் செய்துவிட்டு பிடிபடாமல் சென்றது. அதேபோன்று மாடுபிடி வீரர்களும் போக்குக் காட்டிய காளைகளை போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கி  திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக் காசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top