Close
செப்டம்பர் 20, 2024 7:08 காலை

ஓவிய தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க கோரிக்கை

ஓவியர்கள் சங்கம்

பொன்னமராவதியில் நடந்த தமிழ்நாடு ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் தமிழ்நாடு ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

பொன்னமராவதி  அழகியநாச்சி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற  ஒன்றிய ஓவியத் தொழிலாளர்கள் சங்க  ஆலோசனைக் கூட்டத்துக்கு  மாநிலத் தலைவர் சசி கணேசன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் மாரிமுத்து மற்றும் சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் ஓவிய தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்குவது, பேரிடர், பெரும் தொற்று காலத்தில் நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும்,ஒவியத் தொழிலாளர்கள் நலிவடைந்த குடும்பங்களுக்கு அரசு உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 பொன்னமராவதி ஒன்றிய ஒவிய சங்கத் தலைவரா சேனா ஆர்ட்ஸ், துணைத்தலைவராக அர்ச்சுனன் செயலாளராக நிலா ஆர்ட்ஸ், துணைச் செயலாளராக ராமசந்திரன், பொருளாள ராக வீரையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் செயற்குழு உறுப்பினர்கள் பிறைசூடன், சுரேஷ், சாமி, பாண்டி, செந்தில் மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த ஓவிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மூத்த ஓவியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top