Close
செப்டம்பர் 19, 2024 10:55 மணி

நார்த்தாமலை கோயில் தேரோட்டம்: ஏப். 11 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு
11.04.2022 அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட் டுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமலை கிராமம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திரு விழா 11.04.2022 (திங்கள்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையும், அதற்கு பதிலாக 23.04.2022 சனிக் கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமை களை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பணி நாளாகவும் இருக்கும்.

இந்த உள்ளூர் விடுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும் ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top