Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

திருச்சி விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுக்கோட்டையைச்சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் நியமனம்

விமானநிலைய ஆலோசனைக்குழு

திருச்சி விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள புதுகை வழக்கறிஞர் ஏ.சந்திரசேகர்

திருச்சிராப்பள்ளி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக புதுக்கோட்டையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் ஏ.சந்திரசேகரன்(காங்கிரஸ்), கே.கே. செல்லபாண்டியன்(திமுக) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விமானநிலையம்
திருச்சி விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள புதுகை வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன்

புதுக்கோட்டை நகர் நல இயக்க ஒருங்கிணைப்பாளர் ரா. சம்பத்குமார்   வெளியிட்ட  வாழ்த்துச் செய்தியில்,  திருச்சி விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ள இருவரது பணி சிறக்க வாழ்த்துவதாகவும்,

இவர்களை  பரிந்துரை செய்த  மண்ணின் மைந்தரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான

சு.திருநாவுக்கரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top