Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

காவல்துறையினரைத் தாக்கிய வடமாநில தொழிலாளர்களைக் கண்டித்து ஈரோட்டில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக போலீஸாரை தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மொடக்குறிச்சி  காவல் ஆய்வாளர்  மற்றும் போலீஸாரை தாக்கிய வடமாநிலத்தவர்களைக் கண்டித்து  ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே  நாம் தமிழர் கட்சி சார்பில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமை  வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மயூர் கபீர், வெற்றிக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.  வடமாநிலங்களில் இருந்து  தமிழகத்துக்குள் வருபவர்களுக்கு உள் நுழைவு அனுமதி சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்த வேண்டும்.

தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்  முழக்கமிட்டனர். மாவட்டச் செயலாளர்கள் லோகு பிரகஷ், தாமோதரன், சந்திரசேகர் சுப்புசாமி உட்பட  நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் நூற்றுக்கணக்கான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top