Close
செப்டம்பர் 19, 2024 11:25 மணி

புதுக்கோட்டையில் சுதந்திரதிருநாள் அமுதப்பெருவிழா கண்காட்சி தொடக்கம்

புதுக்கோட்டை

புதுகையில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சியை பார்வையிட்ட சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதாராமு, எம்எல்ஏ-முத்துராஜா.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 -ஆவது சுதந்திர தினவிழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 -ஆவது சுதந்திர தினவிழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், இந்திய விடுதலைக்கான சுதந்திர போரில் தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்த தியாகிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில்  அமைக்கப்பட்ட பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  தலைமையில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி  (10.4.2022) துவக்கி வைத்து பார்வையிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75-ஆவது சுதந்திர தின விழா – சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா  கொண்டாடும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி அரங்குகள் மூலமாக ஒவ்வொரு துறையும் தங்கள் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில்  சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்தவர்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்,  முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இத்திட்டங்களையும் இதன்மூலம் பயனடைவதற்கான வழிமுறைகளையும் குறித்து தெரிந்துகொள்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறைகளின் வாயிலாக பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்த தியாகிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தேசிய மற்றும் மாநில அளவிலான சுதந்திரப் போராட்ட தியாகிகளுடன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்களும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற கண்காட்சி அரங்குகள் மூலம்  பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், இக்கண்காட்சியை பார்வையிட வருகை தரும் மக்களின் எதிர்பார்ப்பு குறித்தும் தெரிந்துகொள்வதன் மூலம் அவர்களின் குறைகளை தீர்க்க இயலும்.  வரும் 16.04.2022 வரை ஒருவார காலம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் மூலம் பயனடைய வேண்டும் என்றார்  அமைச்சர் எஸ்.ரகுபதி.

அதனைத் தொடர்ந்து 75 -ஆவது சுதந்திர தினவிழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்  ரகுபதி  வழங்கினார்.
இன்றைய நிகழ்ச்சியில் 75-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top