Close
அக்டோபர் 5, 2024 9:57 மணி

பூங்காநகர் மகாசக்தி முத்து மாரியம்மன்கோயில் பங்குனிப் பெருவிழா- முளைப்பாரி திருவிழா

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் காட்சிதரும் புதுகை பூங்காநகர் மகாசக்தி மாரியம்மன்

பூங்காநகர் மகாசக்தி முத்து மாரியம்மன்கோயில் பங்குனிப் பெருவிழாவைமுன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி திருவிழாவும் திங்கள்கிழமை தேரோட்டமும்  விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பூங்காநகர் மகாசக்தி முத்து மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருவிழா மற்றும் முளைப்பாரி திருவிழா  கோலாகலமாக நடைபெற்றது முன்னதாக முளைப்பாரிகளை சுமந்து பெண்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்து பின்னர் கோயிலில் இறக்கிவைத்து அம்பாளை வழிபட்டனர்.

புதுக்கோட்டை
பூங்காநகர் மகாசக்தி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் முளைப்பாரி எடுத்துச்சென்ற பக்தர்கள்

இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் புதுக்கோட்டை நகராட்சி தலைவி திலகவதி செந்தில் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வளர்மதி சாத்தையா, ராஜேஸ்வரி, தெய்வானை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கோயில் திடலில்  கலைமாமணி  ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் கிராமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது,
ஏற்பாடுகளை மகாசக்தி முத்துமாரியம்மன்  அறக்கட்டளைத் தலைவர்  பழக்கடை பி.சந்திரசேகர் தலைமையில் பூங்கா நகர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top