Close
ஏப்ரல் 23, 2026 11:27 மணி

லாரியில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே லாரியுடன் பிடிபட்ட கடத்தல் ரேஷன் அரிசி முடைகள்

புதுக்கோட்டை மாவட்ட திருமயம் அருகே லாரியில் கடத்திச்சென்ற 3,500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ,காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் படி, திருச்சி காவல் துணை கண்காணிப்பாளர்  ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர்  ஏ. வேம்பு  தலைமையிலான போலீஸார்  திருமயம் தாலுகா, கல்லூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருக்கும் போது கிடைத்த ரகசிய தகவலின் படி, லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

 அந்த லாரியில் சுமார் 3,500 கிலோ(3 .5) டன் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக ஏற்றிக்கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த தெக்கூர் மேலத் தெருவை சேர்ந்த செல்வி, செல்வம் , சதீஷ்குமார், மற்றும் ஓட்டுநர் வேல் பாபு  ஆகியோர் மீது வழக்குப்பதிந்து  கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top