Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

குருபெயர்ச்சி… புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

புதுகை தண்டாயுதபாணி கோயிலில் நடைபெற்ற குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டைமேல ராஜ  வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் குரு  பெயர்ச்சியை   முன்னிட்டு 14.04.2022 அதிகாலை 4 மணிக்கு சிறப்பு  வழிபாடு நடைபெற்றது.

குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் நவகிரகங்களுக்கு  , பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சா மிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராத னை  நடந்தது .

ஆலயத்திலுள்ள தெட்ஷணாமூர்த்திக்கும் தண்டாயுதபாணி சுவாமிக்கும் ,  விநாயகர்க்கும்   சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது. இதில்,   அந்தப் பகுதியிலுள்ள பக்தர் கள் வந்திருந்து   வழிபட்டனர். அனைவர்க்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது . விழா ஏற்பாடுகளை பாலு அய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்புடன் செய்திருந்தனர்.

புதுக்கோட்டை
புதுகை தண்டாயுதபாணி கோயிலில் நடந்த குருபெயர்ச்சி விழா

குரு பகவான் 14-4-2022 அன்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள் கும்ப ராசியில் இருந்து தன் சொந்த வீடான மீன ராசிக்குள் பிரவேசித்துள்ளார். அடுத்த ஓர் ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து பலன் கொடுப்பார். இந்த குருப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படிப் பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று  பல்வேறு ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top