Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை பிரசார இயக்கம் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவ மனை  சுகாதார இயக்கம் 1 மாதம் நடக்கிறது  

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை (CLEAN HOSPITAL CAMPAIGN)  பிரசார இயக்கம் மற்றும் தூய்மைப்பணி இம்மாதம்   (30.4.2022  -ஆம் தேதி வரை)  முழுவதும் நடைபெறுகிறது.

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட   தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 புறநகர் அரசு மருத்துவமனைகள், 1 அரசினர் மருந்தகம், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இராணியார் மகப்பேறு மருத்துவமனை மற்றும் 76 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவ மனை    எனும்  பிரசாரம் இயக்கம்  மற்றும் தூய்மைப்பணி ஏப்ரல் 1 முதல் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் வெளி பகுதிகள் உட்பட முழு மருத்துவமனை வளாகத்தையும் தூய்மையாக பராமரித்தல், கழிப்பறைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்யவும், தொற்று நோய்க் கட்டுப்பாட்டுக்கு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது.

கொசு மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், குப்பைகள் மற்றும் கழித்தொதுக்கம் செய்யப்பட்ட பொருட்களை மருத்துவமனை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்துதல், மற்றும் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை பிரச்சாரம் தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, தன்னார்வலர்கள், நகராட்சி, ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை பிரசாரம் மற்றும் தூய்மைப்பணியில் பங்கேற்று  ஒத்துழைக்க வேண்டுமென  ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top