Close
செப்டம்பர் 20, 2024 6:46 காலை

புதுக்கோட்டை: மக்கள்குறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.48 லட்சத்தில் நலத்திட்ட உதவி

புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில் (18.04.2022) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 419 மனுக்களை பொதுமக்கள்  ஆட்சியரிடம்  அளித்தனர்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் , இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள் ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,48,000 மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top