Close
செப்டம்பர் 20, 2024 6:28 காலை

இந்தித் திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர்

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து சிபிஎம்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அலுவல் மொழி என்ற பெயரில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கண்டன உரையாற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.அன்புமணவாளன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top