Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

கீழ்பவானி பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு

ஈரோடு

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.அணைக்கு விநாடிக்கு 833 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று கீழ்பவானி பாசனத்திற்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,000 கன அடி வீதம் தண்ணீர் அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது. பவானிசாகர் இருந்து மொத்தம் 2 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top