Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

மதுரை, பழனி, திருச்செந்தூர் உட்பட 10 கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடக்கம்

கோயில் பிரசாதம்

அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு

மதுரை, பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், உட்பட10 திருக்கோயி ல்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருவேற்காடு தேவிகருமாரியம்மன் திருக்கோயில்,.

திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் உட்பட 10 திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொலிகாட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

வடபழநி ஆண்டவர் கோயிலில்  நடைபெற்ற நிகழ்வில் பக்தர்களுக்கு பிரசாதத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:

முதலைமைச்சரின் வழிகாட்டிதலின் படி கடந்த சட்டமன்ற மானியக்கோரிக்கையில் முதற்கட்ட மாக 10 திருக்கோயில் களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் திருக்கோயில்களுக்கு வருகின்ற பக்தர்களுக்கு நாள் தோறும் வழங்கப்படும், இதனால் தினசரி 10 ஆயிரம் முதல் திருவிழா காலங்களில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள்.

அதற்கு தகுந்தாற்போல் அந்தந்த திருக்கோயில்களில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவு பொருட்கள் தரமாக தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள் ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள 341 திருக்கோயில்களின் பிரசாதம் , நைவேத்யம், உணவு தொடர்பாக ஒன்றிய அரசிடம் தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. ‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்பதற்கேற்ப பழநி, ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி போன்ற திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் தொடங்கப்பட்டு 25 ஆயிரம் பக்தர்கள் பயனைடைந்து வருகின்றனர்.

தங்கு தடையின்றி, இடர்களைக் கடந்து இந்த ஆட்சியின் ஆன்மிகப் பயணம் தொடர்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளில் 100 க்கும் மேல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, அதில் உள்ள 1691 பணிகளும் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும்.

5 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தோருக்கு பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் மூலம் வழங்கப்பட உள்ளன.

மேலும் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள், பக்தர்கள் இடையே முரண்பாடு ஏற்படாமல் தீர்வு காணப்படும். முறைகேடுகளை களைய இந்து அறநிலையத்துறை சட்டங்கள் வலிமையாக இருப்பதால் சிதம்பரம் கோயில் தொடர்பாக புதிய சட்டம் தேவையில்லை, சிதம்பரம் கோயில் தொடர்பான நீதிபதி உத்தரவு நகல் நேற்று பெறப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி புதிய குழு அமைத்து தீர்வு காண உள்ளோம். தீட்சிதர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் இந்து அறநிலையத்துறை செயல்படும், ஆயிரம் ஆண்டு பழைமையான திருக்கோயில்கள் சீரமைக்க இந்த ஆண்டில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைகளை சுட்டிக்காட்டினால் நிறைவு செய்வோம்.

பார்த்தசாரதி திருக்கோயில் திருக்குளம் பக்தர்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்தது. நடிகை குஷ்பு பார்த்ரசாரதி திருக்கோயில் திருக்குளத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ள அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டியதற்கு துறை மூலம் விளக்கமளிக்கப்பட்டு விட்டது, உழவாரப் பணி தொடர்பாக கடந்த ஆட்சியில் முறையாக அனுமதி வழங்கப்படவில்லை என்றார்கள்.  தற்போது அதை சரி செய்யும் விதமாக ஆன்லைன் மூலம் உழவாரப் பணி தொடர்பாக பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2 மாதத்தில் ரூ.170 கோடி நிலுவை தொகை வசூல்

திருக்கோயில் இடங்களில் குடியிருப்போருக்கான மாத வாடகையை முறைப்படுத்தியதால் கடந்த 2 மாதத்தில் இதுவரை இல்லா வகையில் 170 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.  திருவண்ணாமலையில் கிரி வலத்திற்கு 25 லட்சம் பக்தர்கள் கூடினர். பழனி கோயிலில் மாதம் ரூபாய் 5 கோடி வருமானம் வருகிறது.

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் வீரவசுந்தராயர் மண்டபம் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கான கற்கள் நாமக்கல்லில் இருந்து பெறப்படுகிறது. தற்போது வெளிப்பிரகாரங்களில் ரூபாய் 6 கோடியில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடத்தப்படும்.

சித்திரைத் திருவிழாவில் இருவர் இறந்தது துரதிருஷ்டவச மானது, வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க இறைவன் துணையுடன் , பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அமைச்சர் பி.கே. சேகர்பாபு.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங் கள் துறை முதன்மை செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் , திருமகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை தா.வேலு ஜெ.கருணாநிதி, வடபழனி ஆண்டவர் திருக்கோயில் தக்கர் எல்.ஆதிமூலம், இணை ஆணையர்கள் என்.தனபால், கே. ரேணுகாதேவி, சுதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top