Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

திருவரங்குளம் சிவன்கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

திருவரங்குளம் சிவன்கோயிலில் உலக நன்மைக்காக சாதுச்செட்டியார் சங்கம் சார்பில் நடந்த சிறப்பு வழிபாடு

திருவரங்குளம் அருள்மிகு  பெரியநாயகி அம்பாள்   உடனுறை அரங்குளநாதர்   திருக்கோயிலில் அபிஷேகஆராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகிலுள்ள  திருவரங்குளம் அருள்மிகு பெரியநாயகி அம்பாள்   உடனுறை அரங்குளநாதர்   திருக்கோயிலில் கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்கள் சங்கம் சார்பில்  உலக நன்மைக்காக அபிஷேக ஆராதனை சிறப்புவழிபாடு நடத்தப்பட்டது.

ஆலயத்திலுள்ள அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாளுக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகமும்  மலர் அலங்காரம்  தீபாராதனை  நடந்தது.

இதில், மாநில சங்க நிர்வாகிகள் தலைவர் பாலசுப்பிரமணியன் , செயலாளர் அழகப்பன்  மற்றும் அனைத்து புதுக்கோட்டைமற்றும் கிளைச்சங்கங்களின் நிர்வாகிகள், சென்னை,  திருச்சி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை,,ஆலங்குடி,   கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன்  கலந்து கொண்டனர். இதையொட்டி  திருவரங்குளம் அருள்மிகு  பெரியநாயகி அம்பாள்   உடனுறை அரங்குளநாதர்   திருக்கோயில் விழா கோலம்பூண்டிருந்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top