Close
செப்டம்பர் 20, 2024 6:37 காலை

புதுக்கோட்டை பாரத் மெட்ரிக்பள்ளியில் பரிசளிப்பு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பாரத் மெட்ரிக் பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழா

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள  பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் திலகர்திடல்  பாரி நர்சரி பள்ளி இணைந்து  நடத்திய விழாவில்    கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகள் மற்றும்  பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற   மாணவ, மாணவிகளுக்கு  பரிசு  விருது வழங்கும் விழா பள்ளியின்  வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தாளாளர்   து. கருணை செல்வி ரவிக்குமார்   தலைமை  வகித்தார்.  ஆர்.கே .கெளதம் வரவேற்றார்.   சிறப்பு விருந்தினராக   திருச்சி அண்ணா பல்கலைகழகம் பி.மணி   கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு விருதுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்,

நிகழ்வில்,  பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்    சபியுதீன்  மஹாராணி  ரோட்டரிசங்கம்,  கவிதா, சித்ராதேவி, லெட்சுமி, புதுக்கோட்டை   இன்னர்வீல் சங்கத்தின்    தலைவர் சுசித்ரா பெருமாள்,  முன்னாள் நகர் உறுப்பினர்  மலர்விழிமுத்து, கல்வியாளர்கள் ஹரிகரன், வேலுவிஜயபாரதி, சாலைமாமணி  உள்ளிட்டவர்கள் சாதனைப் படைத்த   மாணவ மாணவியரை  வாழ்த்தி பேசினார்கள்.

சிறப்பாக பணியாற்றிய  ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில்  மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், நடனம், யோகக்கலை  நடந்தது.   நிறைவாக ஆசிரியை சங்கீதா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top