Close
செப்டம்பர் 20, 2024 6:27 காலை

ஆஞ்சநேயர் திருக்கோயிலில் கல்வி சங்கல்ப பூஜை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர்கோயிலில் கல்வி சங்கல்ப பூஜை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த  ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அரசு பொது தேர்வு ஏழுதும் 10 -ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிபாடு ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப  பூஜை நடைபெற்றது.

கல்வி சங்கல்ப பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  மாணவ, மாணவிகள் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர் களுக்கு அனுமன் திருச்சபையினர் விருதுகள் வழங்கப்படு கிறது.இதையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  கே.மணி குருக்கள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்துசமய அறநிலையத்துறை பாக்கியராஜ், இலக்கியப் பேரவை நிலவைப்பழனியப்பன், கல்வியாளர்கள் மாலதி செந்தில்வேல் , கணினி ஆசிரியர் சந்திரசேகர், கல்லூரி பேராசிரியர் நாகேஸ்வரன், இதில் சுமார் 300 க்கும்  மேற்பட்ட  மாணவ, மாணவிகளின் மற்றும் பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிகநெறி யாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்கள்  அனைவருக்கும்  முகக்கவசம்  வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top