Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் துர்காதேவி தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சரவணன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். வட்டார செயலாளர் சண்முகப்பிரியா கோரிக்கை விளக்க உரையாற்றினார். கல்வி மாவட்ட செயலாளர் நடனம் ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரையாற்றினார். வட்டார பொருளாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்..

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் தமிழக அரசு அரசாணை வெளியிட வலியுறுத்தியும்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இயலாது என்று கூறியுள்ள நிதியமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top