Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

புதுக்கோட்டை மாவட்ட தேமுதிகவுக்கு புதிய நிர்வாகி நியமனம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலர் கார்த்திக்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளராக கார்த்திக் என்பவரை  நியமனம் செய்து அக்கட்சித் தலைமை  அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மாவட்ட செயலாளராக பணியாற்றிய ஒரு சிலர் கட்சி பணியை சிறப்பாக செய்ய வில்லை என கட்சி நிர்வாகிகள் இடத்தில் இருந்து வந்த புகாரை அடுத்து,  ஏற்கெனவே மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் அதிரடியாக நீக்கப்பட்டு, விராலிமலையில் சேர்ந்த கார்த்திக் என்பவரை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்  புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக இன்று அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் புதுக்கோட்டை எம்ஜிஆர் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து  இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் தேமுதிக உயர்மட்டக்குழு ஜாஹீர் தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வின்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பரமஜோதி, துரைராஜ், புஷ்பராஜ், மாரிமுத்து, மகாலிங்கம், சாமிகண்ணு, உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top