Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

தஞ்சாவூரில் சுதா கருத்தரிப்பு மையம் 17 -வது கிளை திறப்பு

மருத்துவம்

தஞ்சையில் நடந்த சுதா கருத்தரிப்பு மையத் திறப்பு விழா

தஞ்சாவூரில் சுதா கருத்தரிப்பு மையம் 17 -ஆவது கிளை திறக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நடந்த ஈரோடு சுதா கருத்தரிப்பு மையம் 17 -ஆவது  கிளையை, கே .ஜி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையுடன் இணைந்து தஞ்சாவூரில் தொடங்கியது .  திறப்பு விழாவுக்கு  சுதா கருத்தரிப்பு மையத்தின் தலைவர் டாக்டர் சு. கந்தசாமி தலைமை வகித்தார்.

டாக்டர் தனபாக்கியம், டாக்டர் பிரதீபா,நிர்வாக இயக்குனர். டாக்டர் சுதாகர் , கே ஜி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக. இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் , டாக்டர் லதா ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் .

இது குறித்து, டாக்டர் தனபாக்கியம் மற்றும் டாக்டர் பிரதீபா கூறுகையில், சுதா மருத்துவமனை கடந்த 37 ஆண்டுகளாகத் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது . உலகத்தரம் வாய்ந்த குழந்தையின் மைக்கான அனைத்து சிகிச்சைகளும் எங்களது அனைத்து கிளைகளிலும் வழங்கப்படுகிறது.

ஈரோடு, கோவை சேலம் ,சென்னை, மதுரை ,கொழும்பு (ஸ்ரீலங்கா), திருச்சி ஐதராபாத் பெங்களூரு , தேனி திருப்பூர் ஆகிய இடங்களை தொடர்ந்து தஞ்சாவூரில் கே. ஜி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து புதிய கிளையை தொடங்கி இருக்கிறோம் .

தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு குழந்தையின்மைக்கான அனைத்து சிகிச்சைகளும் சிறந்த முறையில் அளிக்கப்படும், என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top