Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

புதுக்கோட்டை திருக்கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் சித்திரைத்திருவிழா நிறைவு

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர்

திருக்கோகர்ணம் கோவிலில் சித்திரை திருவிழாநிறைவுற்றது நிறைவு நாளில்  சுவாமி, அம்பாளுக்கு நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி10 நாட்கள்நடைபெற்ற திருவிழா நிறைவுற்றது.
நிறைவு நாளில்  ஸ்ரீ பிரகதாம்பாள் சுவாமிக்கு சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.

பிரகதாம்பாள் சுவாமி வைரம், தங்க நகைகள், நவரத்தினங்களால் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  தொடர்ந்து  சேமாஸ்கந்தர்,  கோவிலில் மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் வெளியே இரவு 9மணிக்கு  சப்பரத்தில் சாமி, அம்பாள் புறப்பாடு, வீதி உலா நடைபெற்றது.வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top