Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

மே 21 -ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 21.05.2022 அன்று முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட  தகவல்:

புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு –  (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி -II மற்றும் தொகுதி II A ) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு எதிர் வரும் 21.05.2022 அன்று முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 82 மையங்களில், புதுக்கோட்டை கோட்டத்தில் 52 மையங்களில் 15,717 தேர்வர்களும், அறந்தாங்கி கோட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 5,231 தேர்வர்களும், இலுப்பூர் கோட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 1,670  பேர் உள்பட மொத்தம் 22618 பேர்  தேர்வு எழுதவுள்ளனர்.

மேற்கண்ட தேர்வாளர்கள் தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம் மற்றும் மின்வசதி, புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து தேர்வுக் கூடங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப் பாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நாளன்று தேர்வு கண்காணிப்பு பணிக்காக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் 11 பறக்கும்படை குழுக்கள்மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை வழங்க ஏதுவாக 20 நடமாடும் குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் கைப்பேசி  கணிப்பான்கள் மற்றும் மின்னணு கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.

மேலும், தேர்வு எழுதுவோர் தேர்வு நாளன்று முகக் கவசம் அணிந்து வரவேண்டுமென்றும், மேலும் தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்குள் தேர்வாளர்கள் அனைவரும் தேர்வு கூடத்திற்கு வரவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top