Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

சக்தி விநாயகர் கோவிலுக்கு ரூ.7லட்சம் அதிமுக கவுன்சிலர் நன்கொடை

கோபி

கோபியில் கோயிலில் அமைக்கப்பட்ட நிழல்குடையை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

சக்தி விநாயகர் கோவிலுக்கு ரூ.7லட்சம் அதிமுக கவுன்சிலர் நன்கொடை வழங்கினார்.

கோபி சக்தி விநாயகர் கோவிலுக்கு ரூ.7லட்சம் மதிப்பு நிகழ்குடையை அதிமுக கவுன்சிலர் முத்துரமணன்  நன்கொடையாக வழங்கினார்.

கோபி வேலுமணி நகரில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் 7 ம் ஆண்டு விழா மற்றும் 11 வது நகர் மன்ற உறுப்பினர், அதிமுக ஐ.டி.பிரிவு நகரசெயலாளர் முத்துரமணினின் சொந்த செலவில் ரூ.7 லட்சம் மதிப்பில் கோவில் முன் அமைக்கப்பட்டது‌.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. விழாவில், நிழற்குடையை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ.,வுமான கே.ஏ.செங்கோட்ட யன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் பவானிசாகர் எம்.எல்ஏ பண்ணாரி, முன்னாள் எம்பி சத்தியபாமா, ஒன்றிய குழு தலைவர் வழக்குரைஞர் மவுதீஸ்வரன்மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top