Close
செப்டம்பர் 20, 2024 5:31 காலை

புதுக்கோட்டையில் மக்கள் குறைகேட்பு முகாம்: 360 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில்  (23.05.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் சென்னையை சேர்ந்த ஆல் தி சில்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படும் மனநலம் மற்றும் மனவளர்ச்சி குறைபாடுடையோருக்கான 4 இல்லங்களில் உள்ள 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75,000 மதிப்பிலான போர்வைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top