Close
செப்டம்பர் 20, 2024 5:31 காலை

இலங்கை மக்களுக்கு நிவாரண நிதி.. ஒரு மாத ஊதியத்தை வழங்கிய கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

புதுக்கோட்டை

இலங்கை மக்களுக்காக ஒரு மாத ஊதியத்தை கட்சித்தலைமையிடம் வழங்கிய சிபிஎம் எம்எல்ஏ சின்னத்துரை

இலங்கை மக்களுக்கு  சிபிஎம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை தனது ஒருமாத ஊதியதை வழங்கினார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனது ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு புதுக்கோட்டையில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இக்கூடட்த்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை  புதன்கிழமை தனது ஒருமாத ஊதிய மான ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கான காசோலையை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.

இதில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top