Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

77 மாத ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தினர்

77 மாத ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்திஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 77 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்புக்குழு மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி பள்ளி, கல்லூரி ஓய்வுபெற்றோர் நல அமைப்புத் தலைவர் கே.ஜெயபாலன், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் லோகநாதன், இளங்கோவன், மின்சாரத்துறை-அரசுமுகம், பள்ளி கல்லூரி ஆசிரியர் துறை-அ.மணவாளன், எல்ஐசி – எம்.அசோகன் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக என்.ராமச்சந்திரன் வரவேற்றார். ஆர்.சுப்பிரமணியன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top