Close
செப்டம்பர் 20, 2024 5:50 காலை

வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு: புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு

வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணி புரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பார மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 08.11.2011 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில், பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ‘வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக” பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனவே 08.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள வர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்பக் கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)-யிடம் 13.06.2022 முதல் 18.06.2022-க்குள் வழங்க வேண்டும்.
அவ்வாறு பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால், இவ்வறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top