Close
செப்டம்பர் 20, 2024 6:55 காலை

புதுக்கோட்டையில் சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் வீரர்கள், தமிழறிஞர்களின் புகைப்பட கண்காட்சி அரங்கம் திறப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணி்யார் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளை சந்தித்து வாழ்த்திய ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ் மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின்புகைப்பட நிரந்தரக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கம்  அருகில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ் மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின் புகைப்பட நிரந்தரக் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  (13.06.2022) திறந்து வைத்தார்.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட புதுக்கோட்டை  மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரை நினைவுகூறும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட நிரந்தரக் கண்காட்சியைபொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிடலாம் என்றார் ஆட்சியர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top