Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகவிழா

புதுக்கோட்டை

வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் தண்டாயுதபாணி

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டைமேல ராஜ  வீதியிலுள்ள அருள்மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை  முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.

மாலையில்  தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு  மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத் திலும் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.திரளான  பக்தர்கள் வந்திருந்து   வழிபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top