Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில்  பரிசளிப்பு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஈரோ-கிட்ஸ் பள்ளி மாணவிக்கு பரிசளிக்கிறார், வாசகர் பேரவைச்செயலர் எஸ். விஸ்வநாதன். உடன் பள்ளி தாளாளர் கவிஞர் கதிரேசன்

 புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில்  பரிசளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை கூடல் நகரில் உள்ள  மழலையர்களுக்கான  ஈரோ கிட்ஸ் பள்ளியில் பரிசளிப்பு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தாளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ .கதிரேசன் தலைமை வகித்தார்.  பள்ளியில் நர்சரி படிக்கும் குழந்தை எம்.ஆர். ஷஸ்மிதாஸ்ரீ ,  சென்னையில்   கலாம்ஸ் கல்வி நிறுவனம்  ஆன்லைனில்   நடத்திய  கல்வி பொது அறிவு உரை போட்டியில் கலந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் பதில் கூறி   உலக சாதனை    விருது பெற்றுள்ளதை பாராட்டும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில்,   சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட வாசகர் பேரவை செயலாளர் எஸ். விஸ்வநாதன், சாதனை படைத்த  குழந்தை எம்.ஆர். ஷஸ்மிதாஸ்ரீக்கு  பொன்னாடை அணிவித்து  நற்சான்று  வழங்கி  வாழ்த்திப் பேசுகையில், இன்றைய  தலைமுறையில் உள்ள குழந்தைகள் எதிலும் அச்சப்படாமல் பேசுகின்றாகள். பொது நிகழ்வுகளிலும்  கலந்து கொள்கின்றனர். பெற்றோர்கள்  குழந்தைகளிடம் உள்ள திறமை களை சிறந்த முறையில் சந்தோஷத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதில், சமூக ஆர்வலர்கள்,  பெற்றோர்கள் ரேவதிமணிகண் டன்,  கஸ்தூரி உள்ளிடோர்    கலந்து கொண்டு வாழ்த்தினர். நிகழ்ச்சிகளை  ஆசிரியை அமலா தொகுத்து வழங்கினார். முன்னதாக, ஆசிரியை திவ்யா வரவேற்றார். நிறைவாக ஆசிரியை ரூபா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top