Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

அறந்தாங்கி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் திறப்பு

புதுக்கோட்டை

ஆலங்குடி வட்டம், மாங்குடி ஊராட்சி, மருதங்குடி அய்யனார் கோவில் செல்லும் வழியில் புதிதாக மைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மாங்குடி ஊராட்சி, மருதங்குடியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை,  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  (17.06.2022) திறந்து வைத்தார்.

மேலும் ஆலங்குடி வட்டம், மாங்குடி ஊராட்சி மருதங்குடி அய்யனார் கோவில் செல்லும் வழியில் ரூ.3.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினையும்  அமைச்சர் திறந்து வைத்தார்.அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், கீழாத்தூரில் உள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை  பார்வையிட்டு, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

மேலும் கீழாத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியினை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஞான இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, கீரமங்கலம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், ஊராட்சிமன்றத் தலைவர் இந்திரா அன்பரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top