Close
செப்டம்பர் 20, 2024 6:36 காலை

திருப்பூர் அரசு பள்ளியில் மகனை சேர்த்துள்ள மாவட்ட நீதிபதிக்கு குவியும் பாராட்டு

திருப்பூர்

அரசுப்பள்ளியில் தனது மகனை சேர்த்த திருப்பூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி

திருப்பூர் அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்துள்ள :மாவட்ட நீதிபதிக்கு  பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அவிநாசி :மாவட்ட உரிமையியல் நீதிபதி, தன் மகனை, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அவருக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிபவர் வடிவேல். இவரின் மனைவி புனிதா, மகள் ரீமா சக்தி, மகன் நிஷாந்த் சக்தி. தன் மகள் மற்றும் மகனை, முதல் வகுப்பு முதல், அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். இது குறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர்கள்  அரசுப்பள்ளிகளின் மீதான  பார்வையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்  நீதிபதியின் நற்செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top