Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

அக்னிபாத் திட்டத்தைக்கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து சிபிஎம் கட்சியின் ஆர்ப்பாட்டம்.

ராணுவத்தை இந்துத்துவமயமாக்கும் ஆர்எஸ்எஸ் திட்டத்தை அமலாக்கும் வகையில் கொண்டுவரப்படும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்தும், கைவிடக்கோரியும் புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மூத்த தோழர் எம்.ஜியாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், ஜி.நாகராஜன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.மாரிக்கண்ணு, டி.காயத்திரி உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top