Close
செப்டம்பர் 20, 2024 3:32 காலை

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்100 சதம் தேர்ச்சி

புதுக்கோட்டை

பிளஸ்2 தேர்வில் 100 சதத்தேர்ச்சி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கும் முதல்வர் தங்கம் மூர்த்தி

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம்ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை!!!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாணவர்கள் 44, மாணவிகள் 25 மொத்தம் தேர்வு எழுதிய 69 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

எம். ஆஃபிரின் எஸ் அரிஷ்பாபு பா.சந்தோஷினி, ப.ரேஷ்மா வை.சாய்பிரியதர்சினி ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

கணிணிப் பயன்பாடு; பாடத்தில் எம். ஆஃபிரின் பா.சந்தோ ஷினி, ப.ரேஷ்மா ஆகிய மூவரும் நுறு;றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கணக்குப் பதிவியல் பாடத்தில் எம்.ஆஃபிரின் நுறு;றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். கணிணிப் பயன்பாடு; பாடத்தில் எம். ஆஃபிரின் பா.சந்தோஷினி, ப.ரேஷ்மா ஆகிய மூவரும் நுறு;றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.  பா.சந்தோஷினி,  எம். ஆஃபிரின், எஸ்.அரிஸ்பாபு,  ப.ரேஷ்மா,  வை.சாய்பிரிய தர்சினி

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, துணைமுதல்வர் குமாரவேல், ஆசிரியர்கள் அபிராமசுந்தரி, கமல்ராஜ், சுதா, கோகிலா, ராஜாமணி, ஜெயசுதா, அழகன், பிரகாஷ், சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், கார்த்திகா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, பவானி ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top