Close
செப்டம்பர் 20, 2024 6:36 காலை

தமிழ்ச்செம்மல்’ கவிஞர் ஜீவி பணி ஓய்வு பாராட்டுவிழா

புதுக்கோட்டை

‘தமிழ்ச்செம்மல்’ கவிஞர் ஜீவி பணிநிறைவு பாராட்டுவிழா

புதுக்கோட்டை மாவட்ட நலக்கல்வி அலுவலர் பணி ஓய்வு பெற்ற“தமிழ்ச்செம்மல்” கவிஞர் ஜீவி க்கு ,துணை இயக்குநர் மருத்துவ பணிகள் தொழுநோய் அலுவலகத்தில் மாவட்ட துணை இயக்குநர்;. தொழுநோய் அலுவலர் பணிவிடுப்பு ஆணையை வழங்கி சால்வை அணிவித்து நினைவுபரிசு வழங்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் குடும்பநல பணிகள் மற்றும் நிர்வாக அலுவலர் குடும்பநலம் இணைஇயக்குநர் டாக்டர் ராமு மற்றும் துணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர்கள் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் துணை இயக்குநர் தொழுநோய் அலுவலர்கள் மாவட்ட நலக்கல்வியாளர் ஜீவியை கௌரவித்து அவரது இல்லத்திற்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து, அறந்தாங்கி ராஜேஸ்வரி மஹாலில்  நடந்த பணி ஓய்வு  பாராட்டுவிழாவில், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு, தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் அன்பு நிலவன், துணை இயக்குநர் மருத்துவ பணி ஓய்வு டாக்டர் சாமியப்பன், இணை இயக்குநர் டாக்டர் ராமு.

புதுக்கோட்டை சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன்,  அரசு ஊழியர் சங்க பொருளாளர் ரமாராமநாதன்,  த.மு.எ.க.ச.ரெங்கசாமி, கவிஞர் முத்துநிலவன், புதுக்கோட்டை மாவட்ட புத்தக திருவிழா குழுவினர் ராஜ்குமார், மணவாளன், வீரமுத்து , பிரபாகர், முத்துகுமார்.

மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ரோட்டரி சங்க வர்த்தக சங்கம், அரசு ஊழியர்கள், தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்கம் மாவட்ட மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு “தமிழ்ச்செம்மல்”கவிஞர் ஜீவியை வாழ்த்தினர்.

ஏற்பாடுகளை டாக்டர் அஜீத், டாக்டர் சுஜீத், லேப்டெக்னீசியன் வாணிவெங்கட்ராமன் பீர்முகமது ஆகியோர் கவனித்தனர். நிறைவாக ஜீவி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top