Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி ரத்ததானம் வழங்கிய குருதிக்கூடு அமைப்பினர்

புதுக்கோட்டை

ரத்ததானம் அளித்த குருதிக்கூடு அமைப்பினர்

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சாலை விபத்தினால்  இடுப்பு எலும்பு முறிவின் காரணமாக அவசர அறுவை சிகிச்சைக்காக பகவதி என்பவருக்கு உடனடியாக B-நெகடிவ் இரத்தம் தேவைப்பட்டதை நிறைவேற்றும் நோக்கத்துடன் குருதிக்கூடு அமைப்பின் சார்பாக  ஓயாத அலைகள் அறக்கட்டளையில் உள்ள  பூவரசக்குடி வெங்கடேசன்  இரத்தம் வழங்கினார்.
இதையடுத்து, இரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்வில்  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் கண.மாருதி மோகன்ராஜா, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஆர். சிவக்குமார்  கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இதில், குருதிக்கூடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் உடற்கல்வியாசிரியர் முத்துராமலிங்கம், மேட்டுப்பட்டி செந்தில்,  அருண்மொழியின் ஓயாதஅலைகள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முனைவர்  கோ. கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top