Close
செப்டம்பர் 20, 2024 5:31 காலை

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற விஎன்ஆர். நாகராஜன்…

பொன்னமராவதி

சிறந்த விவசாயிக்கான நற்சான்றிதழை பொறியாளர் வி.என்.ஆர். நாகராஜனுக்கு வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி

சிறந்த விவசாயிக்கான பாராட்டு சான்றிதழை பொறியாளர் வி.என்.ஆர். நாகராஜனுக்கு,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தைச்  சேர்ந்த பொறியாளர் வி.என்.ஆர்.நாகராஜனுக்கு  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி, சிறந்த விவசாயிக்கான விருதினை   வழங்கி கெளரவித்தார்

வாராப்பூரை சேர்ந்த பொறியாளர் நாகராஜன் சமூகசேவை, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கிடை யே தோட்டக்கலையில் எண்ணற்ற சாதனைகள் படைத்து வருகிறார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிறுகள் சார்பில் மாவட்ட அளவில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கியமைக்காக விவசாயிகளுக்கான உரிய விருதினைபொறியாளர் நாகராஜனுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி  வழங்கி  பாராட்டினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top