Close
செப்டம்பர் 20, 2024 8:37 காலை

புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான குறைகேட்பு முகாம்

புதுக்கோட்டை

மின்நுகர்வோர் குறை தீர் முகாம்

புதுக்கோட்டை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (07.07.2022 ) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ( இயக்குதலும் காத்தலும்) செயற்பொறியாளர் த.அசோக்குமார் வெளியிட்ட தகவல்:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர்  பு.சேகர்  தலைமையில் புதுக்கோட்டை கோட்டத்துக்குள்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிகளுக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ( 07.07.2022) வியாழக்கிழமை  காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை புதுக்கோட்டை செயற்பொறியாளர், (இயக்குதலும்- காத்தலும்)   வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

எனவே, புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top