Close
செப்டம்பர் 20, 2024 6:29 காலை

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா போட்டிகள்

புதுக்கோட்டை

திருக்கோகர்ணம்வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா போட்டி

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில்
காமராசர் பிறந்த நாள் விழா போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு,  ஆறு முதல் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்புகள் என மூன்று பிரிவாக நடத்தப்பட்டன.

புதுக்கோட்டை
ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

போட்டிகளுக்கு நடுவர்களாக தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் ரமா ராமநாதன், வீதி கலை இலக்கிய அமைப்பின் நிறுவனர் கவிஞர் கீதா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நகர செயலாளர் கவிஞர் சு. பீர்முகமது, திரைப்பட பாடலாசிரியர் புதுகை புதல்வன், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன், ஓவியர் சித்ராகலா ரவி ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

. போட்டிகளுக்கான பரிசுகள் காமராசர் பிறந்த நாள் அன்று வழங்கப்படும். முன்னதாக பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல்  வரவேற்றார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழாசிரியர் எஸ். செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, பவானி ஆகியோர் செய்திருந்தனர்.  போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top