Close
செப்டம்பர் 20, 2024 6:36 காலை

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 16.07.2022 ல் இளைஞர் திறன் திருவிழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இளைஞர் திறன் திருவிழா வரும் சனிக்கிழமை (16.07.2022)  நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:
புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி நிறுவனங்கள் (DDU GKY & TNSDC) வாயிலாக பயிற்சி வழங்கிட படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இளைஞர் திறன் திருவிழா புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் (KKC)  அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் 16.07.2022 அன்று சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இளைஞர் திறன் திருவிழா நடைபெறவுள்ளது.

தொடர்புடைய இளைஞர்கள் உரிய மாற்றுச் சான்றிதழ்;, மதிப்பெண் பட்டியல்;, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை , புகைப்படம் மற்றும் தொழிற் பயிற்சி தொடர்பான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்காணும் இளைஞர் திறன் திருவிழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதியை சார்ந்த அனைத்து இளைஞர்களும் பங்கேற்று  பயன்பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top