Close
செப்டம்பர் 20, 2024 3:32 காலை

ஈரோட்டில் உலக மக்கள் தொகை இரு வார நாள் விழா

ஈரோடு

ஈரோட்டில் நடந்த உலக மக்கள்தொகை நாள் பிரசார ஊர்தியை தொடக்கி வைத்த ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை இரு வார தின விழாவை முன்னிட்டு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் அமைக்கப்பட்ட குடும்ப நல கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் பொது மக்களுக்கு குடும்ப நல விளக்க கையேடு, மஞ்சப்பையை வழங்கினார். பின்னர் விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேர்மன் குறிஞ்சி என்.சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தோஷினி சந்திரா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top