Close
செப்டம்பர் 20, 2024 7:02 காலை

புதுக்கோட்டை நகராட்சிப் பள்ளியில் உடல்நலம் மற்றும் மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பெண்கள் சங்கத்தின் மூலம் ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட உடல் நலம் மற்றும் மனநலம் பற்றிய கருத்தரங்கில் பரிசு வென்ற மாணவர்கள்

ராஜகோபாலபுரம் நகராட்சிப் பள்ளியில் உடல்நலம் மற்றும் மனநலம பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பெண்கள் சங்கத்தின் மூலம் ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதில்,  புதுக்கோட்டை அரசு மனநல மருத்துவ மைய மருத்துவர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடம் உடல் நலம், மனநலம் பற்றி  விளக்கிக் கூறினார்.

மாணவர்களின் கேட்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அறிமுக உரையில் சொல்லப்பட்ட கருத்துகள் சம்பந்தமாக கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் விக்டோரியா வாழ்த்துரை வழங்கினார்.  நிகழ்வுக்கு, சங்கத் தலைவி அருணதயம் தலைமை வகித்தார். செயலர் சாந்தி, முன்னாள் தலைவிகள் வள்ளியம்மை, சூசன் வில்சன், சசிரேகா, நித்யா, வசந்தா் மற்றும் சங்க உறுப்பினர்கள் மற்றும் மனநல பணியாளர் ஹரிஹரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top