Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக 7 மையங்களில் நீட் தேர்வு 4,896 மாணவ- மாணவிகள் எழுதினர்

ஈரோடு

ஈரோட்டில் நீட் தேர்வு எழுத காத்திருந்த மாணவர்கள்

ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக 7 மையங்களில் நீட் தேர்வு 4,896 மாணவ- மாணவிகள் எழுதினர்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு  17.7.2022 பிற்பகலில்  நடைபெற்றது.  ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக இந்த வருடம் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் அவல் பூந்துறையில் உள்ள லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 288 பேர், நந்தா கலை அறிவியல் கல்லூரியில் 864 பேர், திண்டலில் உள்ள கீதாஞ்சலி மேல்நிலைப்பள்ளி மையத்தில் 864, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை டெக் இ என்ஜினீயரிங் கல்லூரி மையத்தில் 504 பேர், நந்தா சென்ட்ரல் பள்ளி மையத்தில் 648 பேர், தி இந்தியன் பப்ளிக் பள்ளி மையத்தில் 864 பேர், கோபி கலை அறிவியல் கல்லூரி மையத்தில் 864 பேர் என மொத்தம் 7 மையங்களில் 4,896 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வானது மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இருந்தாலும் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் முன்னதாகவே வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் யார் வந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு நடைபெறும் 7 மையங்களில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் 11. 40 மணிக்கு பிறகு தங்களுடைய தேர்வு மையத்திற்குள் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கம்மல்கள், வளையல்கள் அணிய தடைபிடிக்கப்பட்டுள்ளது. இதே போல் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. வாட்ச் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை.

தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டில் தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேர்வு மையம் சார்பில் என் 95 முக கவசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக கவசம் அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் பான்கார்டு, ரேஷன் கார்டு, லைசென்ஸ், ஆதார் இவற்றுள் ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் ஒன்றை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட் டிருந்தனர். கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றி தேர்வு நடைபெற்றது.

மேலும் நுழைவாயிலில் தேர்வர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். இதில் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அந்த தேர்வர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணிக்கு நிறைவடைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top