Close
செப்டம்பர் 20, 2024 5:43 காலை

 முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு

புதுக்கோட்டை

குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்ற மாணவி பவனியாவை வாழ்த்திய அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

 முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ளது வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி கிராமம். பேருந்து பயணம் செய்ய 5 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இந்த கிராமத்தை சேர்ந்த டீ கடை நடத்தும் வீரமுத்து – வீரம்மாளின் 3 வது மகள் பவனியா தான் தற்போது  டிஎன்பிஎஸ்சி  நடத்திய  குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார்.

அரசு பள்ளி, கல்லூரியில் படித்து முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற சாதனை பெண் பவானியாவை பலரும் பாராட்டி வரும் நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்  நேற்று நடந்த புத்தகத் திருவிழாவில்  பவனியாவை பாராட்டி பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கி, ஐஏஎஸ்  கனநு நனவாக வேண்டுமென வாழ்த்து தெரிவித்தார்.  அதற்கான உதவிகளையும் செய்வதாகவும் கூறினார்.

கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்பட பலரும் பாராட்டினர்.எனது சிறுவயது கனவு ஐஏஎஸ் ஆவதுதான். அந்த இலக்கை அடைய கிராமம், நகரம், தமிழ் வழி, ஆங்கில வழி என்ற எதுவும் தடையில்லை அதற்கான பயணம் தொடர்கிறது என்றார் பவானியா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top