Close
செப்டம்பர் 20, 2024 7:42 காலை

ஈரோட்டில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு கண்காட்சி

புதுக்கோட்டை

ஈரோட்டில் நடைபெற்ற உலகதாய்ப்பால் வார விழாவில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய துணை மேயர் செல்வராஜ். உடன் மாவட்ட திட்ட அலுவலர் பூங்கோதை (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள்)

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்  சார்பில் ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில்  (05.08.2022) ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி  நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்காட்சியை தொடக்கி வைத்தார்.

இதையொட்டி   கர்ப்பிணிளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.  தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்களை கர்ப்பிணிகளுக்கும்  பெண்களுக்கும்  வழங்கப்பட்டது.

நிகழ்வில்,  மாவட்ட திட்ட அலுவலர் .ஐ.பூங்கோதை (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள்)வட்டார வளர்ச்சி குழந்தை திட்ட அலுவலர்கள்  சாந்தி (ஊரகம்),  மோகனவித்யா (நகர்ப்புறம்), மாவட்ட கண்காணிப்பாளர்  விமலா, போஷன் அபியான் திட்ட பணியாளர்கள்  மணிகண்டன், மாதையன் மற்றும் ஏகம் அறக்கட்டளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்  ஜெகன் ராஜ் உட்பட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top